• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சீரக சம்பா சிக்கன் பிரியாணி

March 7, 2018 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

சிக்கன் – அரை கிலோ

சீரக சம்பா அரிசி – 2 கப்

பெரிய வெங்காயம் – 1

தக்காளி – 1

கொத்தமல்லி- 1 கப் (நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

மிளகாய் தூள் -1  டேபிள் ஸ்பூன்

தனியா தூள் – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்

பட்டை, கிராம்பு, ஏலக்காய் – 2

பிரியாணி இலை – 1

 

செய்முறை:

முதலில் வெங்காயத்தையும் மற்றும் தக்காளியையும் தனி தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்பு பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி தழையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். அரைத்து வைத்த பின்பு ஒரு பாத்திரத்தில் சிக்கனுடன் அரைத்து வைத்த வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி தழை  மற்றும் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், தனியா தூள், தயிர், இஞ்சி, பூண்டு பேஸ்ட் எல்லாவற்றையும் சேர்த்து கல்ந்து அரைமணி நேரம் ஊற வைத்துக்  கொள்ளவும்.

பின்பு குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் கொஞ்சம் நெய் சேர்த்து பின்னர் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, பொருட்களை போட்டு பின்பு அதில் ஊற வைத்த சிக்கனை போட்டு சிறிது நேரம் வேக விடவும். வேக வைத்த பின்பு அதில் அரிசியையும் போட்டு கிளறி விட்டு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி  விட்டு இரண்டு விசில் விட்டு பத்து நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும். சுவையான சிக்கன் பிரியாணி தயார்.

 

மேலும் படிக்க