April 28, 2017 தண்டோரா குழு
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மேற்படிப்பு படிக்க வழங்கப்பட்டு வந்த இட ஓதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மருத்துவ மேற்படிப்பு படிக்க மருத்துவக்கல்லூரிகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்த்து. கடந்த 25 வருடங்களாக இருந்து வந்த இந்த ஓதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்நிலையில் இட ஓதுக்கீட்டை பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கடந்த 9 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்று ஒற்றுமையாய் கைகோர்த்து நின்றனர்.