• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒருவழியாக மனைவியை தேர்வு செய்த ஆர்யா

April 18, 2018 tamilsamayam.com

நடிகை ஆர்யா தனது வருங்கால மனைவியை தேர்வு செய்துவிட்டார்.தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஆர்யாவின் “எங்க வீட்டு மாப்பிள்ளை” நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.16 பெண்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில்,ஆர்யா தனது துணையை தேர்வு செய்கிறார்.

இது நம் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்தன.இருப்பினும் இந்த நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.தற்போது சூசனா,அகாதா,சீதாலட்சுமி ஆகிய மூன்று பெண்கள் இறுதிச் சுற்றில் உள்ளனர்.

இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் தனது துணையை ஆர்யா தேர்வு செய்கிறார். இதற்கான முன்னோட்டத்தில் மூவரும் மணப்பெண் போன்று அலங்காரம் செய்து வரிசையாக நிற்கின்றனர்.அதில் ஒருவரை அருகில் சென்று கட்டிப் பிடிப்பதோடு முடிகிறது.இருப்பினும் முன்னோட்டத்தில் ஒன்றாகவும்,நிகழ்ச்சியில் வேறொன்றாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

மேலும்,இன்று தேர்வாகும் பெண்,ஆர்யாவை திருமணம் செய்தே ஆக வேண்டும் என்றில்லை. தனக்கு விருப்பம் இல்லை என்று கூறி,ஆர்யாவை நிராகரித்தும் செல்லலாம்.

மேலும் படிக்க