• Download mobile app
18 Apr 2024, ThursdayEdition - 2990
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“என்னை பார்த்து பிச்சையெடுத்து சாப்பிடு என்று சொல்ல நீ யாரு?”பாலாஜியை திட்டிய மஹத்

July 11, 2018 தண்டோரா குழு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கடந்த வாரம் அனந்த் வைத்தியநாதன் வெளியேற்றப்பட்டார்.

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொன்னம்பலம் மீண்டும் இரட்டை அர்த்த தொனியில் ஏதொ சொல்ல அது நேற்று முழுவதும் புகைந்து கொண்டிருந்தது.அதன் பின் இந்த வாரத்திற்காக டாஸ்க் தொடர்பான அறிவிப்பை ஜனனி மூலம் வெளியிட்டார் பிக் பாஸ்.அதில்,இந்த டாஸ்க்கில் 3 பேர் திருடர்களாகவும் 3 பேர் போலீஸாகவும் மாற வேண்டும்.அதன் படி யாஷிகா,ஐஸ்வர்யா,டேனியல் திருடர்களாகவும்,மஹத்,மும்தாஜ்,சென்றாயன் போலீஸாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதற்கிடையில்,மஹத் யாஷிக்காக சண்டை,பாலாஜி பேசியதை மட்டும் குறும்படம் போட்டு காட்டினார்கள் மஹத் பேசினால் விட்டு விடுவார்களா என்பது நித்யாவின் வாதம் என பல பிரச்சனைகள் உருவானது.

இந்நிலையில்,இன்று வெளியாகிருக்கும் பிக் பாஸ் ப்ரோமோவில் மஹத்தும் பாலாஜியும் கோபத்துடன் சத்தமாக சண்டையிட்டு கொள்வது போல காட்டப்படுகிறது.இன்று வெளியான புரோமோவில் மஹத் பாலாஜியிடம் “என்னை பார்த்து பிச்சையெடுத்து சாப்பிடு என்று சொல்ல நீ யாரு?”என்று கோபமாக கத்துகிறார்.பதிலுக்கு பாலாஜியும் கோபமாக எதோ சொல்ல மஹத் “போடா காமெடி” என்று திட்டுகிறார். அப்போது,இருவரும் அடிக்கச் செல்வது போல் ஒருவரை நோக்கி ஒருவர் பாய்ந்து செல்கிறனர்.

இன்றைய நிகழ்ச்சியில் தெரியும் அந்த சண்டை உண்மையான சண்டையா அல்லது டாஸ்க்குக்காக போடப்பட்ட விளையாட்டுச் சண்டையா என்று.பிக் பாஸ் வீட்டின் விதிகளின் படி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டால் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்பது குறிப்படத்தக்கது.

மேலும் படிக்க