• Download mobile app
16 Apr 2024, TuesdayEdition - 2988
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவின் முதல் ஸ்டெரோஸ்கோபிக் 3டி படத்தில் நடிக்கும் நடிகை அஞ்சலி

May 21, 2018 தண்டோரா குழு

விஜய் ஆண்டனியின் ‘காளி’ படத்திற்கு பிறகு நடிகை அஞ்சலியின் கைவசம் மம்மூட்டியின் ‘பேரன்பு’, சசிகுமாரின் ‘நாடோடிகள் 2’, விஜய் சேதுபதி படம் என அடுத்தடுத்து படங்கள் உள்ளன.

அடுத்ததாக விஜய் சேதுபதி ஜோடியாக பெயரிடப்படாத படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.இந்நிலையில், மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க அஞ்சலி கமிட்டாகியுள்ளார். லிசா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ‘PG மீடியா வொர்க்ஸ்’ நிறுவனம் சார்பில் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தயாரிக்கவுள்ளார்.

திகில் கலந்த த்ரில்லர் படமாக உருவாகவுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்கவுள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகவிருக்கும் இந்த ஹாரர் படத்தை Helium 8K கேமரா மூலம் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர். இது இந்தியாவின் முதல் ஸ்டெரோஸ்கோபிக் 3டி படமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘விரைவில் படத்தில் நடிக்கவுள்ள இதர நடிகர்களின் பட்டியல் மற்றும் ஷூட்டிங் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க